வணக்கம்,
இது என் முதல் வலைப்பூ , முதல் படைப்பு. எனெவே சொல் மற்றும் எழுத்துப்பிழைகளை தயவுகூர்ந்து மன்னிக்கவும். நான் என் செவியில் விழியில் படும் செய்திகளை என் கருத்துக்களோடு இவ்வலைப்பூவில் கலந்தளிக்கிறேன். உங்கள் உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் விமர்சனங்களாக இங்கே பதிப்பிக்கவும். முதலில் கடவுள் வாழ்த்து ...
கடவுள் அல்லது இறைவனை வாழ்த்தும் முன் (சற்றே பெரிய) சிறு குறிப்பு : எனக்கு நான் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்று இன்னும் சரியாக விளங்கவில்லை காரணம் எனக்கு ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு முதலில் விளங்க வெண்டும்.
நான் முதலில் என் நிலையை விளக்குகிறேன், நான் கடுவுளை நம்புகிறேன். கட உள் என்பதே கடவுள் (என் கருத்து) நாம் நம் உள்ளே கடந்து சென்று காண வேண்டிய ஒருவர். எனவே உறுதியாக கடவுள் நம் உள்ளேதான் அல்லது நம்மில் தான் இருக்கிறார்.
ராமன், இயேசு, புத்தர் அனைவரும் கடவுளே ஏனெனில் அவர்கள் அனைவரும் தம் உள்ளே கடந்தவர்கள். நாமும் கடவுள் ஆகலாம் நம்மை நாம் கடவுள் என்று நம்பினால். நான் தான் கடவுள் என்னால் எல்லாம் முடியும் நான் அனைவரையும் ஆட்டி வைப்பேன் என்று இதை கருதுவது அபத்தம். நான் எப்படி கடவுளோ அது போல் பிற மனிதனும் கடவுளே. நாய் பூனை வாத்து அனைத்தும் கடவுளே.
மனிதன் எல்லாவற்றிலும் தன்னை உயர்வாகவும் பிற உயிர்களை தாழ்வாகவும் பார்த்தே பழகியதால் இதை ஏற்பது சிறிது கடினமாக இருக்கும். உண்மையில் இப்பிரபஞ்சத்தில் உலகம் ஒரு சிறு துகள் அதில் நாம் அனைவரும் சிச்சிறு துகள்கள். ஒரு தூசி மற்றொரு தூசி இலிவாக கருதுவது எவ்வளவு அப்பதமானது.
மற்றபடி எனக்கு பிற சம்பிரதயங்களில் பெரிய நம்பிக்கை இல்லை. இதை படித்தவர்கள் என்னக்கு கூறவும் நான் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்று!
கடவுள் வாழ்த்து தொடர்ச்சி..
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Looks like you're a human being.. Way to go.. For more details on this topic you can refer "God's debris"..
ReplyDeleteI am reading God's Debris now. I is really good to read. Thanks for your suggestion.
ReplyDelete