Sunday 27 December, 2009

கள்வனின் காதலி

தலைப்பை பார்த்து இது SJ சூர்யாவின் திரைப்படம் பற்றியது என்று யாரும் தயவு செய்து பதற வேண்டாம். நேற்று நான் படித்த திரு கல்கி அவர்களின் கள்வனின் காதலி புதினத்தை பற்றியோரு சிறு குறிப்பே. பொன்னியின் செல்வனையும், சிவகாமி சபதத்தையும் படித்தபின் இப்புதினத்தை படித்தால் நிச்சயம் என்னை போல் அனைவரும் ஏமாற்றம் அடைவீர்கள்.
இது சரித்திரப்புதினம் அன்று சமூகப்புதினம். கல்கி அவர்களின் நடையிலும், அவர் பாத்திரப்படைப்பிலும் சிறு குறையுமில்லை. இக்கதை கல்கி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடப்பதால் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்) நாம் இக்கதையோடு அவ்வளவாக ஒன்ற முடிவத்தில்லை. பொன்னியின் செல்வனில் பல கதாபாத்திரங்களோடு விளையாடிய கல்கி அவர்களுக்கு இதில் உள்ளதோ பத்திற்கும் குறைவான கதாபாத்திரங்கள், அதில் மூவரை மட்டுமே கதை சுற்றி வருகிறது.
 இதில் காவல் அதிகாரியாய் வரும் சாஸ்த்ரி கதாப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் கமலபதி கதாப்பாத்திரம் அவ்வளவு அழுத்தமாக அமைக்கப்படவில்லை.
கல்யாணியோ சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் குழப்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. முத்தையன் துடிப்பும் வீரமும் உள்ள கல்கியின் வழக்கமான கதாநாயகன் பாத்திரம் ஆனால் புத்திசாலித்தனம் மட்டும் சிறுதும் இல்லாமல் போனது ஏனோ? வழக்கம் போல இதிலும் கல்கி காதலர்களை இறுதி வரை போராட விட்டு தோல்வியடைய வைக்கிறார்.

இக்கதை நாம் 50 வருடம் முந்தியோ அல்லது கல்கி பற்றி தெரியாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தால் ஒரு வேலை சிறப்பாக தோன்றலாம்.        

Saturday 12 December, 2009

பேருந்து

நான் சென்ற பதிப்பில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நண்பர் பாலாஜிக்கு நன்றி. அவர் சிபாரிசு செய்த God 's Debris என்ற புத்தக்கத்தை நான் படிக்கத்தொடங்கிவிட்டேன்
ஆனால் இன்னும் முடிக்கவில்லை. என்னுடன் பணிபுரியும் கிறித்தவ நண்பருடன் "Free Will " பற்றியும் விவிலியம் பற்றியும் நான் சில முறை விவாதித்திருக்கிறேன். God 's Debris புத்தகத்திலும் அதே போன்ற விவாதம் உள்ளது an Intresting Coincidence !
நான் விவிலியத்தையும்,  God 's Debris ஐயும் படித்து முடித்தப்பின் இத்தலைப்பிற்கு
மீண்டும் வருவோம்.


பிற நாட்டுப் பொதுப்போக்குவரத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கையில்
பொது போக்குவரத்துசேவை நம் நாட்டில் சிலபல இன்னல்களுக்கு
இடையேயும்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது என்றே
எண்ணத்தொன்றுகிறது.
ஐரோப்பா நாடுகளில் பொது போக்குவரத்திற்கு ரயில்களே அதிகமாக பயன் படுத்தபடுகிறது. நம் ஊரை போல் அங்கே டிக்கெட் வழங்கப்படுவதில்லை (வாக்கியத்தை முழுவதுமாக படிக்கவும்) , வேறு விதமாக டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஒரு முறை வாங்கும் டிக்கெட் நாம் தொடர்ந்து 2 மணி நேரம் (எத்தனை முறை வேண்டுமானாலும்) உபயோகிக்கலாம். அது போக ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்றும் ஒரு ஜோன், இரண்டு ஜோன் ... என்றும்  டிக்கெட் வழங்கப்படுகிறது. அங்கு ஊர் concentric circle லாக ஜோன்கள் பிரிக்கப்படுள்ளது. பேருந்துகள் மிக குறைவாகவே பயன் படுத்தப்படுகிறது.
வார நாட்களில் ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் என்று திட்டமிடப்படுள்ளது. இதுவே வாரஇறுதி எனில் 15 முதல் 30௦ நிமிடம் வரையும், ஊருக்கு வெளியே என்றால் ஒருமணிநேரம்,வரையும் காத்திருக்கவேண்டும்.
இதை மேற்போக்காக பார்க்கையில் மிகச்சிறப்பாக தோன்றினாலும் நம் ஊரில் இதைவிட குறைவான நேரமே காத்திருக்க வேண்டும். மேலும் கட்டணம் நமது ஊரில் மிக மிக குறைவு. ஒரு ஜோன் ஒரு டிக்கெட் 1.85 ஐரோ அதாவது நம் பண மதிப்பின் படி 130 ரூபாய் (ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ஐரோ). 10 .03 க்கு ரயில் என்றால் நீங்கள் 10 .04 சென்றால் கட்டாயம் குறைந்தது 9 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். Taxi கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 5 ஐரோ. உங்களிடம் கார் இல்லை என்றால் வேறு வழியே இல்லை (ஆட்டோ கிடையாது). அங்கு ஒரே ஒரு ஆறுதல் சிட்டி எக்ஸ்பிரஸ் என்று பழைய பேருந்தின் முன் எழுதி ஒட்டி காசு பிடுங்க மாட்டார்கள்.

Thursday 10 December, 2009

கடவுள் வாழ்த்து

வணக்கம்,

              இது என் முதல் லைப்பூ , முதல் படைப்பு. எனெவே சொல் மற்றும் எழுத்துப்பிழைகளை தயவுகூர்ந்து மன்னிக்கவும். நான் என் செவியில் விழியில் படும் செய்திகளை என் கருத்துக்களோடு இவ்வலைப்பூவில் கலந்தளிக்கிறேன். உங்கள் உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் விமர்சனங்களாக இங்கே பதிப்பிக்கவும். முதலில் கடவுள் வாழ்த்து ...








கடவுள் அல்லது இறைவனை வாழ்த்தும் முன் (சற்றே பெரிய) சிறு குறிப்பு : எனக்கு நான் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்று இன்னும் சரியாக விளங்கவில்லை காரணம் எனக்கு ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு முதலில் விளங்க வெண்டும்.


நான் முதலில் என் நிலையை விளக்குகிறேன், நான் கடுவுளை நம்புகிறேன். கட உள் என்பதே கடவுள் (என் கருத்து) நாம் நம் உள்ளே கடந்து சென்று காண வேண்டிய ஒருவர். எனவே உறுதியாக கடவுள் நம் உள்ளேதான் அல்லது நம்மில் தான் இருக்கிறார்.


ராமன், இயேசு, புத்தர் அனைவரும் டவுளே ஏனெனில் அவர்கள் அனைவரும் தம் உள்ளே கடந்தவர்கள். நாமும் கடவுள் ஆகலாம் நம்மை நாம் கடவுள் என்று நம்பினால். நான் தான் கடவுள் என்னால் எல்லாம் முடியும் நான் அனைவரையும் ஆட்டி வைப்பேன் என்று இதை கருதுவது அபத்தம். நான் எப்படி கடவுளோ அது போல் பிற மனிதனும் கடவுளே. நாய் பூனை வாத்து அனைத்தும் கடவுளே.

மனிதன் எல்லாவற்றிலும் தன்னை உயர்வாகவும் பிற உயிர்களை தாழ்வாகவும் பார்த்தே பழகியதால் இதை ஏற்பது சிறிது கடினமாக இருக்கும். உண்மையில் இப்பிரபஞ்சத்தில் உலகம் ஒரு சிறு துகள் அதில் நாம் அனைவரும் சிச்சிறு துகள்கள். ஒரு தூசி மற்றொரு தூசி இலிவாக கருதுவது எவ்வளவு அப்பதமானது. 

மற்றபடி எனக்கு பிற சம்பிரதயங்களில் பெரிய நம்பிக்கை இல்லை. இதை படித்தவர்கள் என்னக்கு கூறவும் நான் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்று!
கடவுள் வாழ்த்து தொடர்ச்சி..

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.